* வாழ்க்கையின் சிரமம் புரியாமல்
துக்கத்தின் முகவரி தெரியாமல்
வாழ்ந்தது மழலை பருவத்தில்...
* புத்தக மூட்டை சுமையாய் ஆனது
பள்ளிப் பருத்தில்...
* கனவுகள் சுமந்து
கவலைகள் தொலைப்பது
கல்லூரி பருவத்தில்....
* தேடல் மட்டுமே
வாழ்க்கையானது இளமைப் பருவத்தில்...
* பொருளை தேடி
நிம்மதியை தொலைப்பது
நடுத்தர பருவத்தில்....
* மெய்பொருள் தேடி
துறவறம் கொள்வது
முதுமைப் பருவத்தில்...
